Header Ads

  • சற்று முன்

    .4 கோடீஸ்வர பெண்களை ஏமாற்றிய புருடா புருசோத்தமனுக்கு வலை வீச்சு !



    கோவை வெல்லலுர் பகுதியை சேர்ந்த 53 வயதான புருடா புருசோத்தமன்.  இவர் மீது ஆன்லைன் ,மளிகை பொருட்கள், ஷேர் மார்க்கெட் என பல மோசடி வழக்குகள் உள்ளது. 
    புருடா புருசோத்தமனும் அவளது மகளான கீதாஞ்சலியும் சேர்ந்து விவாகரத்து ஆன பணக்கார  பெண்களை குறி வைப்பதே இவர்களின் வேலை.  திருமண தகவல் மையத்தில்   தெடர்புகளை சேகரித்து  அவர்களை ஏமாற்றுவதே இவர்களின் வேலை.
    சென்னையை சேர்ந்த 48 வயதான சமூக சேவகி உட்பட 4 பெண்கள் புகார் அளித்துள்ளனர். சென்னை அண்ணாநகரை  சேர்ந்த  சமூக சேவகி  தன் 16 வயதில்  பெற்றோர் தாய்மாமனுக்கு   திருமணம் செய்துவைத்தனர். பின் அவருடன் கருத்து வேறுபாடு காரணமாக 1992 ல் விவாகரத்து செய்து தனிமையில் 25 ஆண்டு காலம் வாழ்ந்து வந்தார். பின்னர் உறவிங்கள் மூலம் மதுரை மெட்டி ஒலி திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார்.
    புருடா புருசோத்தமன் மகளான கீதாஞ்சலி சமூக சேவகி பெண்ணிடம் தொடர்ப்பு கொண்டு என்னுடைய தந்தைக்கு உங்களை மிகவும் பிடித்துள்ளது. உங்களின் குரலை கேட்கும் போது என் தாயாரின் குரல் போல் உள்ளது என்று கூறி மயக்கியுள்ளனர்.என்னுடைய தந்தை பெரிய பணக்காரர் என்றும் இப்போதுதான் 26 லாரிகளை 15 கோடிக்கு   ஸ்ரீ தேவி  டெஸ்டைல்ஸ்    விற்றுவிட்டதாகவும்  பணம் ஒரு மாத காலத்தில் வந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறி வந்த நிலையில் தீடீர் என்று 1 கோடி பணம் தேவைப்படுகிறது ஆசை வார்த்தை பேசி 1 கோடி பெற்றுக் கொண்டு தலைமறைவாகிவிட்டனர்.   இறுதியில் விசாரிக்கும்போது இது போல பல பெண்களை ஏமாற்றி வந்தது தெரியவந்தது. கீதாஞ்சசலி கைதான நிலையில் அவரது தந்தையான புருடா புருசோத்தமன் தலைமறிவாகிவிட்டார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad