Header Ads

  • சற்று முன்

    வட சென்னை இணை ஆணையர் சுதாகர் மாற்றம்


    வடசென்னை காவல்துறை இணை ஆணையராக பொறுப்பு வகித்துவந்த சுதாகர் ஐ.பி.எஸ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய இணை ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹா ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தென்சென்னை போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையராக பொறுப்பு வகித்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21-ஆம் தேதி இடைத் தேர்தல் நடத்த இருக்கிறது. முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் காலியாக இருந்த இத்தொகுதியில் ஏற்கெனவே தேர்தல் அறிவிக்கப்பட்டு, பணப்பட்டுவாடா புகார்களால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பெரும் பரபரப்புக்கு மத்தியில் நடைபெற இருக்கிறது ஆர்.கே.நகர் இடைத் தேர்தல். தொகுதி முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து  புகார்கள் குவிந்து வருகின்றன.  ஆளும் கட்சிக்கு ஆதரவாக காவல்துறை செயல்பட்டு வருவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க சார்பில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், வடசென்னை இணை ஆணையராக இருந்த சுதாகர் மாற்றப்பட்டு, பிரேம் ஆனந்த் சின்ஹா புதிய இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad