Header Ads

  • சற்று முன்

    டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் மயங்கிய நிலையில் ஆம்லன்ஸ்யில் ஏற்றப்பட்டார் .



    சென்னை ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து தேர்தல் அதிகாரிகள் தொகுதி முழுவதும் தேடுதல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், போலீஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட டி.டி.வி. ஆதரவாளர் கைதுசெய்யப்பட்டார்.



    இதையடுத்து, அவர் மயக்கம் அடைந்ததால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.ஆர்.கே.நகர்த் தொகுதியில் பணப்பட்டுவாடா நடப்பதாக சிறப்புத் தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் அதிகாரிகளும், போலீஸாரும் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணிடம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக இருந்தது  கண்டுபிடிக்கப்பட்டு அவரை விசாரித்தனர். தொடர்ந்துஅவரை ஆர்.கே.நகர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதைஅறிந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள், காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்த பாலா என்ற இளைஞர், போலீஸாருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் போலீஸார் அவரை மட்டும் காவல் நிலையத்துக்கு உள்ளே அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் அவர்குறித்து எந்தத் தகவலும் இல்லை. போலீஸாரும், துணை ராணுவத்தினரும் ஆர்ப்பாட்டக்காரர்களை தள்ளு முள்ளு முறையைக் கையாண்டு அங்கிருந்து கலைத்தனர். இதன்பின்னர் போலீஸார் அழைத்துச் சென்ற பாலா காவல் நிலைய வாசலில் மயங்கிய நிலையில் கிடந்தார். பாலாவின் நிலையைப் பார்த்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள், 108 ஆம்புலன்ஸுக்குப் போன் செய்து அவரை அதில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad