Header Ads

  • சற்று முன்

    மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு !!!




    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளளார். ஆர்.கே.நகரில் வேட்பாளர்களுடன் தேர்தல் அதிகாரிகள் வேட்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். 
    இதுகுறித்து வேட்பாளர்களுடன் தேர்தல் அதிகாரிகள் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 



    தேர்தல் விதிகள் பற்றி வேட்பாளர்களிடம் கூறினோம். தேர்தல் நேர்மையாக நடைபெற ஒத்துழைப்பு கோரினோம். வாக்காளர்களை வீடு வீடாக விசாரித்து பட்டியல் உருவாக்கினோம். ஆர்.கே.நகரில் 7 பார்வையாளர்கள் முகாமிட்டுள்ளனர். மொத்தம் 59 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நோட்டாவுடன் சேர்த்து 60. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் வைக்கப்படும். ஒப்புகைச்சீட்டு என்றவுடன் பலரும் ஓட்டளித்தவுடன், இயந்திரத்தில் இருந்து சீட்டு வரும், அதனை கையுடன் எடுத்துச் செல்லலாம் என நினைத்துக் கொண்டுள்ளனர்.


    ஆனால் உண்மையில், நீங்கள் எந்த சின்னத்திற்கு வாக்களித்தீர்களோ அதன் அருகே சிறிது நேரம் லைட் எரியும். அதனை வைத்து நீங்கள் எந்த சின்னத்திற்கு ஓட்டளித்துள்ளீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். 


    வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போன்று வங்கிகளில் அதிக பணம் டெபாசிட் செய்யப்படுவதும் கண்காணிக்கப்படுகிறது என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad