Header Ads

  • சற்று முன்

    ஆ.கே .நகர் இடைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. மனுத்தாக்கலின்போது, வேட்பாளர் தவிர 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
    இந்நிலையில், தேர்தலை கண்காணிக்க 9 பார்வையாளர்களை தலைமைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க பொதுப் பார்வையாளர்கள், வேட்பாளர்களின் செலவுகள் மற்றும் கட்சியின் பிரச்சாரம் ஆகியவற்றை கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள், தேர்தல் முறைகேடுகளை தடுக்க காவல் பார்வையாளர்கள் என மொத்தம் 9 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான சட்டம் ஒழுங்கு பார்வையாளர் இம்மானுவேல் கே.முய்வா சென்னை வந்துள்ளார்.
    அடுத்தடுத்து, தமிழகம் வரவுள்ள தேர்தல் பார்வையாளர்கள் அனைவரும், டிசம்பர் 4ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த பின்னர், பணிகளைத் தொடங்குவார்கள். வாக்குப்பதிவு நெருங்கும் நேரத்தில் தேவைக்கேற்ப கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad