Header Ads

  • சற்று முன்

    இரவில் தூங்கி கொண்டிருந்த மனைவி ,மீது டார்ச் லைட் அடித்தவனை தட்டிக்கேட்ட கணவனுக்கு அரிவாள் வெட்டு


    நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியில் மனைவி மீது டார்ச் அடித்து பார்த்ததை தட்டிக் கேட்ட மீனவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 10 பேர் கொண்ட கும்பலை போலிசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி அருகே மேலமணக்குடி கடற்கரை கிராமம் லூர்து நகரை சேர்ந்தவர் வின்சென்ட் வயது 34. மீன்பிடி தொழில் செய்து வந்த இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்த போது சாலையில் சென்ற கீழமணக்குடி பகுதியை சேர்ந்த கிதியோன் என்பவர், வின்சென்ட் மனைவி மீது டார்ச் லைட் அடித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் வின்சென்ட்.

    ஏன் என் மனைவி மீது டார்ச் லைட் அடித்துப் பார்த்தாய் என்று தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிதியோன் தனது நண்பர்களை அழைத்து வந்து வின்சென்ட்-ஐ கடுமையாக தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறபடுகிறது. இதில் பலத்த காயமடைந்த வின்சென்ட் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad