Header Ads

  • சற்று முன்

    தீவிர தாக்குதலில் பலியான 44 இந்திய இராணுவ வீரர்களுக்கு தேவி கான்வென்ட் பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்


    புளியந்தோப்பு:சென்னை,புளியந்தோப்பில் இயங்கி வரும் தேவி காண்வென்ட் பள்ளியின் சார்பாக காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலி்ல் பலியான இந்திய ராணுவ வீரர்களிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி 18/2/2019 அன்று காலை நடைபெற்றது.இதில் காண்வென்ட் பள்ளியின் மாணவ மாணவியர்,ஆசிரியைகள் மற்றும் பெறௌறோர்கள் கலந்துக் கொண்டனர்.இந்திய ராணுவ வீரர்களிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மைதானத்தில் புளியந்தோப்பு உதவி ஆனணயர் திரு.விஜய் மற்றும் புளியந்தோப்பு காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரவி கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணியாக மாணவ மாணவியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாரு புளியந்தோப்பு நெடுஞ்சாலை வழியாக பள்ளி வளாகத்தை வந்தடைந்தனர்.நிகழ்ச்சியை பள்ளியின் சார்பில் பள்ளி நிர்வாகி திரு.க.விஜயகுமார் மற்றும் பள்ளியின் தாளாளர் திருமதி.அனுசுயா விஜயகுமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad