Header Ads

  • சற்று முன்

    சென்னையில் விபச்சார தொழில் கொடி கட்டி பறக்கிறது......


    சென்னை தாம்பரம் பகுதியில் கணவன் மனைவி போல் நாடகம் ஆடி பெரிய வீட்டை வாடகை எடுத்து அதில் ஆந்திரா, கேரளா, இது போக வட மாநிலத்தவரை வைத்து விபசார தொழில் படுஜோராக நடத்தி வருகின்றனர். 

     தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டில் அதிக அளவில் ஆண்கள் வந்து போவதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அங்கு தனிப்படை போலீசார் சோதனை நடத்தியபோது விபாச்சாரம் நடப்பது தெரியவந்தது. 

    அங்கு மும்பையை சேர்ந்த விபச்சார அழகிகளை மீட்டனர். விபசார கும்பல் தலைவன் குணா தப்பி ஓடி விட்டான். இது போல சென்னையின் பல இடங்களில் இதே டெக்னிக்கை பயன்படுத்தி விபச்சார தொழில் கொடி கட்டி பறப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். விபசார பிரிவு காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad