ஆர்.கே.நகர் இடை தேர்தல் நடக்குமா ? (அ) ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கபடுமா ?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயாவின் தொகுதியான ஆ.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இடை தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது.
அதிமுக பன்முக அணிகளாக பிரிந்து தற்போது இரு அணிகளாக உருவெடுத்துள்ளது. எடபடி பழனிச்சாமி தலைமையில் ஓர் அணியும், டிடி.வி தினகரன் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டுவருகிறது.
சிறப்பு படை, போலீஸ், இராணுவம் வாகன சோதனை என இப்படி பல கண்காணிப்பாளர்கள் இருந்தும் ஒரே ஒரு சின்ன தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியை கண்காணிக்க முடியவில்லை .
இந்த சூழலில் மீண்டும் ஆர். கே.நகர் இடை தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் தேர்தெடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் சென்ற முறை போல் ஆர்.கே. நகர் இடை தேர்தலில் தற்போது பணபட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் சென்ற நிலையில் தேர்தல் ஆணையம் ஜனநாயகதிற்கு ஆதரவு தருமா ?
இந்த கேள்வி ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு மட்டும் பொருந்தாது . ஒவ்வொரு குடிமகனுக்கும் எழுகின்ற சந்தேகமாகும்..
கருத்துகள் இல்லை