போக்குவரத்து ஊழியர்கள் திடீர் சாலை மறியல் !
சென்னை காலை முதல் அரசு போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர் . இதனால் சென்னையில் பெரும்பாலான பணிமனையில் இருந்து பேருந்து இயக்கவில்லை.
இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெற்றதால் கோரிக்கை நிறைவேறாமல் வாபஸ் அறிவித்ததால் ஒரு பிரிவினர் சாலை மறியல் ஈடுபட்டனர். சென்னை பல்லவன் சாலையே போர் களமாக கட்சியளிகிறது.
இதனால் மாலை வேலை முடித்து வீடு திரும்பும் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பேச்சு வார்த்தையில் அமைச்சர்கள் தேர்தல் பிறகு பேசலாம் என்று சமாதானபடுத்தி அனுப்பியதால் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை