Header Ads

  • சற்று முன்

    சென்னை பம்மலில் நடைப்பெற்ற ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின்புதிய பொருப்பாளர்கள் நியமனம்

    செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பம்மல் நகர ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் எம் ஜி ஆர் நகர் சதாம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பாக அழைப்பாளர்களாக முன்னாள் மாநில தலைவர் ஹைதர் அலி,மாநில நிர்வாகி கூடுவாஞ்சேரி சதாம், வடசென்னை மாவட்ட தலைவர் அப்துல்,மத்திய சென்னை மாவட்ட தலைவர் மீரான்,காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அப்துல் கனி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் புழல் பஷீர், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் நெடுங்குன்றம் சலீம்,ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோசனை மற்றும் இக்கூட்டத்தில் புதிய நகர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் பாதிக்கப்படுகின்ற அனைத்து சமுதாய மக்களுக்காகவும் முன்களத்தில் நின்று பணியாற்றுவோம் என்ற உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும் இதில் பம்மல் பகுதி தலைவர் ஜாபர் உசேன், பம்மல் பகுதி செயலாளர் சாயின்ஷா, பம்மல் நகர் இளைஞர் அணி செயலாளர் முகமது பிலால், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad