Header Ads

  • சற்று முன்

    பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் பேரூந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    திருவாடானை பேருந்து நிலையம் அருகில் ஆட்டோ சங்கம் செயல்பட்டு வருகிறது. சிஐடியு மற்றும் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று 6 ம் தேதி தமிழகத்தில் தொடர்ந்து வரும் டீசல் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசிற்கு தெரிவிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ தொழிலாளர் சங்க செயலாளர் பழனி தலைமை தாங்கிவிவசாய தொழிலாளர் சங்க  மாநில துணைத் தலைவர் முத்துராமன்  வரவேற்புரையாற்றினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சந்தனம், சிஐடியு சிவாஜி உள்ளிட்டோர் சிறுப்புரையாற்றி பேசினார்கள். இந்நிகழ்வில் தொடர்ந்து உயர்ந்து வரும்  பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டதாகவும் கூறிவிலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய வேண்டும் என்ற கண்டன கோஷங்கள் மத்திய அரசுக்கு எதிராக எழுப்பப்பட்டது. விரைவில் விலை குறைக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் போக்குவரத்து மாநில குழு உறுப்பினர் ஆனந்த், ஆட்டோ தொழிலாளர்கள் இருளையா, ரத்தினம்,அசோக் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad