Header Ads

  • சற்று முன்

    "லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி!!!

     

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த புதுப்பேட்டை அருகே உரம் ஏற்றி சென்ற லாரி பழுதடைந்து நின்று  கொண்டு இருந்தது. அப்போது அம்மூரில் இருந்து வாலாஜாவை நோக்கி வந்த இருசக்கர வாகனம் லாரி மீது மோதியது அதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சைக்காக பரிசோதனை செய்தபோது  அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சிறப்பு தனிப்பிரிவு  உதவி ஆய்வாளர் உதயசூரியன்  சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கெட்ராமன், கோபிகிருஷ்ணன்,வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இவர் தனியார் ஆன்லைன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார் என தெரியவந்துள்ளது காட்பாடி கோபாலபுரம்  பகுதியைச் சேர்ந்தஜான்சன்  ஜேக்கப்(42) இவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது


    எமது செய்தியாளர் : ஆர்.ஜெ. சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad