கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசின் செயல்பாடு மோசம் கே எஸ் அழகிரி குற்றச்சாட்டு....
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiap-m9B8Mo1nf2n3xws40fq3FreSu5Gppyk8dukhi-MFwk99AkYEva-BV0trLYsL-cIpeKub5aYlBmz2wVSpTVycJKUBd-TLa1shjlCFj3W48j9OZsbU9AD_4gS23g_THs9VmBqh4pWPl1/s0/82c14aee-0f72-4c0c-ac00-e0eecd2c7a76.jpg)
சிப்பாய் வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு நாளையொட்டி வேலூரில் உள்ள சிப்பாய் புரட்சி நினைவிற்கு சின்னத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் பின்னர் அவர் கூறியதாவது இந்திரா காந்தி ராஜீவ் காந்தி பெயரில் அறக்கட்டளைகள் உள்ளன ஆனால் காங்கிரசுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அறக்கட்டளைகள் வெளிப்படைத்தன்மையுடன் இயங்கி வருகிறது அதனை மத்திய அரசு தணிக்கை செய்யலாம் இதன் மூலம் நன்கொடை கொடுத்தவர்கள் விவரத்தை அறிய முடியும் பாஜகவிற்கு எதிராக ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதால் பதில் சொல்ல முடியாமல் தனிப்பட்ட முறையில் சோனியா காந்தி ராகுல் காந்தி தாக்குகின்றனர் இந்திய-சீன பிரச்சினையில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது தமிழக அரசு தடுப்பு பணியில் சுமாராக கூட செயல்படவில்லை ஜனவரி மாதம் கேரளாவில் முதல் தொற்று ஏற்பட்டது அப்போது மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தையும் கேரளா இரண்டாவது இடத்திலும் கேரளா தற்போது குறைந்து விட்டது தமிழகம் இரண்டாவது இடத்திற்கு வந்து உள்ளதே இதற்கு தமிழக அரசுதான் காரணம் இவ்வாறு அவர் கூறினார்
கருத்துகள் இல்லை