திருவாடானை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே கோவனி ஆட்டூர் கிராமத்தை சேர்நதவர்கள் சரக்கு வாகனத்தில் சுக்ராவரத்தில் தங்களது உறவினர் இறப்பிற்கு சென்றுவிட்டு திரும்பி ஊருக்கு செல்வதற்கு திருவாடானை நோக்கி வந்த போது திருவாடானை மாணவர்கள் விடுதி அருகே சரக்கு வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில் சரக்கு வாகனத்தில் வந்த கோவனி, ஆட்டூர் கிராமங்களைச் சேர்ந்த கணேசன் மனைவி மகாதேவி(55), சுப்பன் மகன் நடராஜன்(52), சிங்காரம் மனைவி காளியம்மாள்(60), ஜவகர்லால்(40), செல்லம்மாள்(55), ராஜேந்திரன்(65), இந்திரா(55) மேகலா(35), எழுவக்காள்(42) அடைக்கலம்(70) முனியம்மாள்(80), கிட்டு(70) உள்பட 15க்கும் மேற்பட்டோருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. பக்கத்தில் இருந்தவர்கள் மற்றொரு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் காயம்பட்ட அணைவரும் திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்கள். திருவாடானை காவல் நிலையத்தார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை