பயணிகள் கொந்தளிப்பு - போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம்
விழுப்புரம் பணிமனையிலிருந்து இயங்கும் சொகுசு பேருந்துகள் அனைத்தும் படுமோசமாகவுள்ளது . திருவண்ணாமலை டூ சென்னைக்கு செல்லும் அனைத்து சொகுசு பேருந்துகளிலும் இருக்கை உள்ள கைப்பிடி உடைந்து காணப்படுகிறது. சிறுபள்ளங்களில் பேருந்து இறங்கினால் கூட அதனுடைய தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. நோயாளிகள் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் அரசு சொகுசு பேருந்துகளில் பயணம் செய்ய அஞ்சப்படுகின்றனர்.
ஒவ்வொரு பௌர்ணமி பிரதோஷம் அன்று சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு திருவண்ணாமலை இருந்து சென்னைக்கு அதிக பயணிகள் வந்து செல்லுகின்றனர். அதிக கட்டணம் வசூலிக்கும் அரசு போக்குவரத்து அதற்கு தகுந்தாற் போல் இருக்கை வசதிகள், ஜன்னல்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. திருவண்ணாமலை என்பது பக்தர்கள் ஆன்மிக தலமாக திகழ்வதால் பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆகவே உடனே பராமரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை