• சற்று முன்

    வாணியம்பாடியில் நூதன முறையில் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த திமுகவினர்





    வாணியம்பாடி அருகே ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் ஆங்கில புத்தாண்டு 2026 முன்னிட்டு 15 ஆயிரம் பேருக்கு சமுதாய நல்லிணக்க சம பந்தி விருந்து .


    ஒரே மேடையில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வேடங்கள் அணிந்து பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் மதனாஞ்சேரி கிராமத்தில் உள்ள தளபதி அறிவாலயத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு அன்று சமுதாய நல்லிணக்க சமபந்தி விருந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டு தினமான இன்று வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகளை சார்ந்த திமுக  உறுப்பினர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 15 ஆயிரம் பேருக்கு ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வி. எஸ். ஞானவேலன் சார்பில் பிரியாணி தயார் செய்யப்பட்டு  பிரியாணி ,லெக் பீஸ் என 15 வகையான அறுசுவை  அசைவ விருந்து, வேட்டி மற்றும் புதிய ஆண்டிற்கான காலண்டர்கள் வழங்கினார். இதில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரின் வேடமணிந்த கலைஞர்கள் திமுகவினருக்கும் பொது மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



    மேலும் நையாண்டி, கரகாட்டம், ஓயிலாலாட்டம், நையாண்டி, பாட்டுக்கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 15 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு புத்தாண்டு வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர்.

    இன்று புத்தாண்டு தினமான இன்று மதனாஞ்சேரி பகுதியில் உள்ள தளபதி அறிவாலயம் விழாக்கோலம் போன்று காட்சி அளித்தது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad