Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு பீலா ராஜேஷ் தெரிவித்தார்


    தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தமிழக சுகாதாரச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 690 நேற்று வரை இருந்தது. இந்த நிலையில் இன்றைய நிலை குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில் வீட்டு கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 60,739 ஆக உள்ளது. அது போல் அரசு கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 230 ஆக உள்ளது. 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பு முடிந்தவர்களின் எண்ணிக்கை 32075 ஆக உள்ளது. இதுவரை 6095 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டன. இன்று தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 48 பேரில் 42 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்றிருந்தனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது. இதவரை 21 பேர் குணமடைந்துள்ளனர் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad