Header Ads

  • சற்று முன்

    திருப்பாலைக்குடி ஊராட்சி செயலாளர் மாணிக்கத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்

    இராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடியைச் சேர்ந்த சண்முகம் வயது 60 என்பவரிடம் வீடு கட்ட அப்ரூவலுக்கு ரூபாய் 45 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஆர்எஸ் மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்( கிராம ஊராட்சி) பச்சம்மாள் மற்றும் திருப்பாலைக்குடி ஊராட்சி செயலர் மாணிக்கம் ஆகியோரிடம் இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறையினர்  ஆர்எஸ் மங்கலம் யூனியன் ஆபீஸில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்

     திருப்பாலைக்குடி சேர்ந்த சண்முகம் என்பவர் காந்தி நகர் காந்திநகர் 1404 சதுர அடியில் வீடு கட்டி வருகிறார் இதற்கு ஒரு அடிக்கு நூறு ரூபா வீதம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கேட்டதாக கூறப்படுகிறது ஆனால் சண்முகம் என்னிடம் இவ்வளவு காசு இல்லை நான் ஒரு 20 ஆயிரம் தருகிறேன் எனக் கூறியுள்ளார் அதற்கு ஒத்துக் கொள்ளாமல் ஐம்பதாயிரம் கேட்டுள்ளார் அவர் என்னிடம் பணம் இலலை என கூறியுள்ளார் சண்முகம் அவருடைய உறவினர் ராமமூர்த்தி ஆகியாேர இ்ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இந்த விவரத்தை கூறி உள்ளனர் ஒழிப்புத் துறையினரின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர் அப்போது சண்முகமும் ராமமூர்த்தியும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பணம் கொடுக்கும்போது ஒளிந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர்கள் ஜானகி,வானதி ஆகியோர்  திருப்பாலைக்குடி ஊராட்சி செயலாளர் மாணிக்கத்தையும் கையும் களவுமாக பிடித்து அவர்கள் இருவரையும் கைது செய்து இராமநாதபுரம் கொண்டு சென்றுள்ளனர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்செய்தியாளர் :  திருவாடானை - ஆனந்குமார் 





    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad