சசிகலா, தினகரன் அனுமதி இல்லாமல் வீடியோவை வெளியிட்டேன் - வெற்றிவேல்
ஜெயலலிதா ஐ.சி.யூ.வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டபோது, எடுக்கப்பட்ட வீடியோ என்றும், அதை சசிகலா மற்றும் தினகரன் அனுமதியில்லாமலே வெளியிட்டதாகவும் வெற்றிவேல் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, தாம் எப்படி இருக்கிறோம் என்பதை பார்ப்பதற்காக அவரே எடுக்கச் சொன்னதாகவும், சசிகலா அந்த வீடியோவை எடுத்ததாகவும் வெற்றிவேல் தெரிவித்துள்ளார். தனக்கு தோன்றியதாலேயே ஜெயலலிதா வீடியோவை, தான் வெளியிட்டதாகவும், இன்னும் பல வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் வெற்றிவேல் கூறியுள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்டதற்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும் பிரச்சனையில்லை என வெற்றிவேல் கூறியுள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்டதற்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும் பிரச்சனையில்லை என வெற்றிவேல் கூறியுள்ளார்.
தலைமை செயலகத்தில் செய்தியளர்களை சந்தித்தபோது வெற்றிவேல் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை